Tuesday, January 27, 2015

வேடந்தாங்கல் (25.01.2015) ஒரு நாள் சுற்றுலா

உங்க நாக்குல உப்பு இருக்கா? ஊர் சுற்றும் குழுவின் 2015 ஜனவரி மாதம் சென்ற சுற்றுலா ஜாலி சிற்றுலாவாக அமைந்தது. காரணம் கேரள அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிக்கு போய்வந்து (2014 மார்ச்) பல மாதங்களுக்குப் பிறகு வேடந்தாங்கலுக்குப் போனோம் என்பதால்.

மலையை உடைத்துவிடலாம், பெரும் பள்ளம் தோண்டிவிடலாம். உடல் களைப்பில் மனம் அடங்கி விடும். ஆனால் எழுத்தைப் படித்தாலோ, கணினியில் அடித்தாலோ அந்த எழுத்துக்களை வடிவமைப்புக்குள் அடைத்தாலோ மூளை சோர்ந்துவிடும். ஒரே பணியைத் திரும்பத் திரும்ப செய்வதில்தான் களைப் பும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. மனம் ரணமாகி விடுகிறது. அதற்கு மருந்திட்டு மயிலிறகால் வருடும் ஔடதம்தான் இதுபோன்ற சிற்றுலாக்கள்.

நாங்களெல்லாம் பிரபல பாரம்பரியப் பத்திரிகை யில் பணியாற்றுபவர்கள். தொடர்பணியில் இடர் நீங்க, இளைப்பாறப் பயணிக்கும் தேனீக்கள்.

சிற்றுலாவுக்கு ஏற்ப ஏழு பேர்கள் ஒரு மகிழுந்தில் 24ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை பயணித்தோம். அன்று இரவு வனதுறைக்குச் சொந்தமான பிரம்மாண்ட அறையில் தங்கினோம். வேலையி லிருந்து நேரே சென்றதால் பணி களைப்பும் பயணக் களைப்பும் தீர ஆடை களைந்து பதவி, தகுதி, சீனியாரிட்டி, சுப்பீரியாரிட்டி களைந்து நாமெல்லாம் ஜாலி பண்ண வந்திருக்கிறோம் என்ற நினைப்பில் ஆட்டம் போட்டோம்.

இரவு விருந்துக்கு போன்லெஸ் சிக்கன், சப்பாத்தி, தோசை எல்லாம் ஸ்பெஷல் ஆர்டரில் தருவிக்கப் பட்டது. அப்புறம் என்ன, பல(ம)õன உணவுக்குப்பின் பேச்சுக் கச்சேரிதான். உலகத்தில் மேலிருந்து கீழ்வரை பேச்சு போனது. அதோடு நிற்வில்லை. மேடிலிருந்து பள்ளம் வரை பேச்சு போனது. அதோடும் நிற்க வில்லை. தலை முதல் கால் வரை பேச்சு போனது. அதோடும் நிற்கவில்லை. மேலிருந்து கீழ்வரை பேச்சு போனது. அதோடு நின்றதா? இல்லை... இல்லை.. கீழே கீழே கீழே போய்... நாக்கில் உப்பு இருக்கா என்கிற உப்பு ஆராய்ச்சிவரை போனது. வஞ்சனையில்லா வார்த்தையால் சிரிப்பொலி பல ராக ஆலாபனைகளையும் மிஞ்சும் அளவுக்குப் போனது.

நின்றவர் நின்ற நிலையில்... அமர்ந்தவர் அமர்ந்த நிலையில்... சாய்ந்தவர் சாய்ந்த நிலையில்... கிடந்தார்கள் காலையில் பார்த்தபோது. என்ன பேசினோம், எப்போது முடித்தோம், எப்போது தூங்கினோம். யாருக்குத் தெரியும். ஆஹா... அந்த இரவு சொர்க்க இரவு... அந்த இரவு 1001 இரவுகளில் ஒரு இரவு... அந்த இரவு இனிதான ஏகாந்தத்தையும் மீறிய இரவு...

ஞாயிறு காலை நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள உலகப்புகழ் வேடந்தாங்கலுக்குப் போனாம். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் பகுதியில் இந்த ஆண்டு சரியான மழை இன்மையால் ஊரே காய்ந்திருந்தது. அதனால் பறவைகள் தங்கும் வேடந்தாங்கல் பகுதியில் நீர் இன்மையால் பல பறவைகள் வெளிநடப்பு செய் திருந்தன. பார்வையாளர்கள் பரிதவிப்பும் ஏங்கும் கண்களும் ஏமாற்ற முகமும் வறட்சியின் வெளிப் பாடுகள். >சரி, இப்போது கொஞ்சம் வேடந்தாங்கலைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல் கின்றன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர்ப் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதைக் கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். வேடந்தாங்கல் என்றால் ‘வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1897 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்ற ஆங்கிலேயர் வேடந்தாங்க லைப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார். அதிலிருந்து இந்த இடம் வனத்துறையின் வசம் வந்திருக்கிறது. பறவைகளுக் குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இவ்விடத்திற்கு வரும் பறவைகளில் நீர்க்காகங் கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை. கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

வேடந்தாங்கலுக்குப் பல நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வரும் பறவைகள் அனைத்தும் இங்கு இனப்பெருக்கம் செய்வதில்லையாம். ஏனெனில், ஒரு பறவை இனம் எங்கு இனப்பெருக்கம் செய் கின்றதோ அதுவே அதன் தாய்நாடு.

வேடந்தாங்கலுக்கு வரும் ஐரோப்பியப் பறவை யினங்களான ஊசிவால் வாத்து (Northern pintail), உள்ளான் (Common sandpiper), பழுப்பு வாலாட்டி (Grey wagtail), Blue & winged teal போன்றவை ஐரோப்பியக் குளிரைத் தவிர்ப்பதற்காக பலவிடங் களுக்குச் செல்லும்; வழியில் இங்கும் வந்து செல் லுமாம்.

உலகமே கொண்டாடும் தீபாவளித் திருநாளில் இவ்வூர் மக்கள் பறவைகளின் பாதுகாப்பைக் கருதி பட்டாசு வெடிப்பதில்லை என்ற செய்தி கேட்டதும் மெய்சிலிர்த்தது. அவ்வூர் மக்களுக்கு சல்யூட்.

2014ஆம் ஆண்டில் மட்டும் 35,000 பறவைகளுக்கு மேல் இங்கு வந்து சென்றுள்ளன. அதோடு 1,45,212 மக்கள் வந்து பறவைகளைக் கண்டு சென்றுள்ளனர். இந்த ஆண்டு பறவைகளின் வரத்து மிகக் குறைவு. இருந்தாலும் புகழ்பெற்ற இடத்தில் கால்பதித்த திருப்தி. அன்று மதியம் கிளம்பி மாலை வந்து வீட சேர்ந்தோம். இந்தப் பயணத்துக்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த லதானந்த் அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment